KeralaLatest

சாந்திகிரி ஆசிரமம் அமைப்பு செயலாளர் சுவாமி குருமித்ரன் ஞானதபஸ்வி குருஜோதியில் இலயனம் ( சமாதி) ஆனார்.

“Manju”

 

திருவனந்தபுரம் (போத்தன் கோடு) : சாந்திகிரி ஆசிரமம் அமைப்பு செயலாளர் சுவாமி குருமித்ரன் ஞானதபஸ்வி குருஜோதியில் லயித்தார். திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர், நீண்ட நாட்கள் வயிறு சம்பந்தமான நோய்களால் சிகிச்சையில் இருந்தார். இன்று (30-05-2023 செவ்வாய்) காலை 10.10 மணிக்கு உடல் பிரிதல் நடந்தது. அம்மாவுடன் பால்ய காலம் முதல் ஆசிரமத்தில் வாழ்க்கை. 47 வயதுடைய இவர் கல்லூரி கல்விக்குப் பிறகு ஆசிரமத்தில் ஆழ்ந்த ஈடுபாடு அவரை 2002 இல் சன்னியாசம் ஏற்றுக்கொண்டு தனது ஆன்மீக வாழ்க்கை தொடர்ந்தார். பின்னர் நீண்டகாலம் குருவின் பிறப்பிடமான சந்திரூர் சாந்திகிரி ஆஸ்ரம கிளையின் பொறுப்பேற்றார். பின்னர் 2011 முதல் ஆசிரமம் இயக்குநர் குழுவின் இணைச் செயலாளராகவும் செயலாற்றி வந்தார். 2019 முதல் அமைப்பு செயலாளர் ஆகவும், சாந்திகிரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் மேலாளர் ஆகவும் பணியாற்றினார். பூர்வாஸ்ரமத்தில் அவரது அஜயகுமார் எல். 1976 பிப்ரவரி 10 அன்று சிரையின்கீல் என்ற ஊரில் கிருஷ்ணன்குட்டி மற்றும் லதிக அம்மா தம்பதிகள் மகனாகப் பிறந்தார் . நாளை (31-05-2023 புதன்) காலை 7 மணி முதல் பொதுதரிசனம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு பிரார்த்தனை இறுதி சடங்குகள் சாந்திகிரி ஆஸ்ரமத்தில் நடக்கும்.

Related Articles

Back to top button