IndiaLatest

ஜனனி கருணாதிப்தி ஞான தபஸ்வினிக்கு வரவேற்பு

“Manju”

போத்தன்கோடு(திருவனந்தபுரம்): விஜயதசமி அன்று குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிடம் தீட்சை பெற்ற ஜனனி கருணாதீப்தி ஞான தபஸ்வினிக்கு சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனனி சித்த மருத்துவம் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவியும் கூட. இவர் சன்னியாச தீட்சைக்கு பிறகு முதல் முறையாக கல்லூரிக்கு வந்த ஜனனியை கல்லூரி முதல்வர் டாக்டர். டி.கே.சௌந்தரராஜன், துணை முதல்வர் டாக்டர்.பி. ஹரிஹரன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள், மாணவ, மாணவிகள் வரவேற்றனர். வாழ்க்கையில் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு பாதையை தேர்ந்தெடுத்த ஜனனிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிர்வாக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் முனைவர் பி.ஹரிஹரன் பேசுகையில், ஜனனிக்கு அனைத்து விதமான ஆதரவையும், பிரார்த்தனைகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள் அளித்து, குரு கொடுத்த அந்த புனித ஆடையின் பெருமையை காக்க வேண்டும் என்றார்.

 

Related Articles

Back to top button