சாந்திகிரி ஆசிரமம், ஒசூர் கிளை தீபம் ஏற்றி துவக்கம் குறிக்கப்பட்டுள்ளது
ஒசூர் (தமிழ்நாடு): சாந்திகிரி ஆசிரமம் ஒசூர் கிளையில் இன்று காலை 10 மணி அளவில் ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி அவர்கள் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். தி. மு. க. கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் யுவராஜ் அவர்கள், ஐயர்ணப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜே. கே. கோபால், சி. மாரப்பா, முன்னாள் துணைத் தலைவர் டி. அனுமன் தாபா, சபீர் திருமலா, ஆனந்த ராமலு, முன்னாள் ஊர் கவுண்டர், வி. தேவராஜ், கேசவமூர்த்தி என், ராஜசேகரன், எஸ். ராஜம்மா நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். சாந்திகிரி ஆசிரமம் ஒசூர் கிளைத் தலைமைஜனனி அபயாஞான தபஸ்வினி அவர்கள், சாந்திகிரி ஆசிரமம் பெங்களூரு மண்டலத் தலைமை சுவாமி சாயுஜ்யநாத் ஞானதபஸ்வி அவர்கள், சுவாமி ஜோதிர்பிரகாஷ் ஞானதபஸ்வி அவர்கள், ஒசூர் கிளைத் தலைமை (சேவைகள்) ஜனனி மங்களா ஞானதபஸ்வினி அவர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர் வி. அனந்தராம் மற்றும் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் டி.சிங்காரவேலன், மாரப்பா, ரவிசங்கர், ரவி வெங்கடேஷ், மகேஷ் மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, அட்வ. விஜயராஜ், சதீஷ் மிலிந்தா, பிரம்மச்சாரி அகில், ஜே.எல். பிரம்மச்சாரி சாந்திபிரியன்.பி.ஆர்., பிரம்மச்சாரினி வந்திதா சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சாந்திகிரி ஆசிரமம் அதன் செயல்பாடுகளை ஒசூரில் கடந்த ஜூலை 1, 2016 அன்று தொடங்கியது.