இந்தியா ஞானமுள்ள பெரியவர்களின் பூமி – ஆர். ராமச்சந்திரன் நாயர் ஐ.ஏ.எஸ் (ஓய்வு).
போத்தன்கோடு (திருவனந்தபுரம்): இந்தியா ரிஷிகளின் தேசம், 1800-ம் ஆண்டு வரை உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது, ஆனால் அறிவின் அடிப்படையில் உலகிலேயே முதன்மை நாடாகும் ஏனெனில் குடும்பம் என்ற அமைப்பு இங்கு நன்கு உள்ளது என்று முன்னாள் தலைமைச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் நாயர் ஐ.ஏ.எஸ் (ஓய்வு).
கூறினார் .விருத்தன் என்ற சொல்லிற்கு மலையாளத்தில் முதுமை என்றும் ஆனால் விருத்தன் என்ற சொல்லிற்கு சமஸ்கிருதத்தில் ஞானத்தில்முதுமை உள்ளோரை ஞானவிருத்தன் என்றும் அதன்படி இந்தியா ஞானிகளின் தேசம் என்றும் , 150 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியின் மூலம் இந்தியா ஏழையாக மாறியதாகவும், ஆனால் அப்போதும் இந்தியா ஞானம் நிறைந்ததாக இருந்தது என்றும் அவர் கூறினார். மிக விரைவில் இந்தியா மீண்டும் பொருளாதார மற்றும் சமூகத் துறையில் உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்றார். சாந்திகிரி ஆசிரமத்தில் நவஒலி ஜோதிர் தின விழாவின் கௌரவ மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது உத்தியோகப்பூர்வ காலத்தில் முதன்முறையாக ஆசிரமத்துக்கு வந்ததையும், அதன் பிறகு இரண்டு மூன்று முறை ஆசிரமத்துக்குச் சென்று நவஜோதி ஸ்ரீகருணாகரகுருவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதையும் நினைவு கூர்ந்தார்.
விழாவில், திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரி R&B. துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர். டி.வி. ஸ்ரீனி, பஞ்சகர்மா துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர். டி. கே. சுஜன், கௌமாரபிரித்யா துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர். அனில் குமார் எம். வி. ஆகியோர்களை சாந்திகிரி ஆசிரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி மற்றும் தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி அவர்களும் சேர்ந்து கௌரவித்தனர்.