போத்தன்கோடு: சாந்திகிரி ஆசிரமத்தில் நவபூஜிதம் சமர்ப்பணம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. காலையில், சககரண மந்திரத்தின் மண்டபம் முழுவதும் தீபம் ஏற்றிய பின், , குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அமிர்த ஞானதபஸ்வினிக்கு, துறவிகள் மற்றும் சன்னியாசினிகள் மலர்மாலை மற்றும் தட்டசமர்ப்பணம் நடத்தினர். பின்னர், பர்ணசாலையில் மலர் மாலை சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனவரி 30, 2002 அன்று, சாந்திகிரி ஆசிரமத்தின் நிறுவனர், நவஜோதி ஸ்ரீகருணாகர குரு, ஆதிசங்கல்பத்துடன் இணைந்த 1001 சிறப்பு நாட்களை நிறைவு அடைந்ததை யொட்டி இந்த நாள் நவபூஜிதத்தின் சமர்ப்பண ஆண்டுவிழாவாக கருதப்படுகிறது.