IndiaLatest

பயணம் தொடங்கியது: அபிவந்திய சிஷ்ய பூஜிதா சென்னைக்குப் புறப்பட்டார்.

“Manju”

போத்தன்கோடு: சென்னை, செய்யூர் கிளை சாந்திகிரி ஆசிரமத்திற்கு குருஸ்தானிய அபிவந்திய சிஷ்ய பூஜிதாவின் பயணம் துவங்கியது.

அபிவந்திய சிஷ்ய பூஜிதா இன்று (5-01-2024) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு போத்தன்கோடு சாந்திகிரி ஆசிரமத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். 6E6169 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் காலை 11.55 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். ஆசிரமத்தின் வாயில் எண் 4-ல் இருந்து பக்தர்கள் சிஷ்ய பூஜிதாவை வழியனுப்பி வைத்தனர்.

மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் சிஷ்ய பூஜிதாவை ஆசிரம கிளை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் சென்னையில் உள்ள குருபக்தர் இல்லங்களுக்குச் செல்லும் சிஷ்ய பூஜிதா, 6ம் தேதி காலை செய்யூரிலுள்ள சாந்திகிரி கிளை ஆசிரமத்திற்குச் சென்றடைகிறார்.

ஆசிரமப் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி, தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி, நிதிச் செயலாளர் ஜனனி நிர்மலா ஞானதபஸ்வினி, பொதுச் செயலாளர் அலுவலக இயக்குநர் (நிர்வாகம்) ஜனனி திவ்ய ஞானதபஸ்வினி ஆகியோர் உடன் செல்கின்றனர். மேலும்
சன்னியாசினி, சந்நியாசிகள், பிரம்மச்சாரிகள், இல்லத்தார்கள் மாலையில் சென்னை ஆசிரமத்திற்குச் செல்கின்றார்கள்.

சென்னை, செய்யூரிலுள்ள சாந்திகிரி கிளை ஆசிரமத்தில் ஜனவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை வெள்ளி விழா கொண்டாடப்பாடுகிறது.

இதற்கு முன்பு சிஷ்ய பூஜிதா அவர்கள் நவம்பர் 16, 2023 அன்று சாந்திகிரியின் வேறொரு கிளை ஆசிரமமான புது தில்லில் நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பயணம் மேற்கொண்டிருந்தார்.

Related Articles

Back to top button