சென்னை: வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, செய்யூர் கிளையில் சாந்திகிரி ஆசிரமம் நடத்தும் ‘மக்கள் ஆரோக்கியம்’ இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துவதற்கு சித்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை செய்யூர் ஆசிரமத்தை அடைந்தனர். சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளையில் மருத்துவக் குழுவினரை ஜனனி மங்களா ஞானதபஸ்வினி மற்றும் டாக்டர் ஜனனி ஷ்யாமரூப ஞானதபஸ்வினி ஆகியோர் வரவேற்றனர். இன்று மதியம் முதல் மருத்துவக் குழுவினர் மருத்துவ புள்ளி விவரக் கணக்கெடுப்பு பணியை தொடங்குகின்றனர். ஜனவரி 7ம் தேதி நடைபெறவுள்ள பெரிய அளவிலான மருத்துவ முகாமை முன்னிட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ‘மக்கள் ஆரோக்கியம்’ திட்டத்தை பிரபல திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
Related Articles
എൻ.ജെ. നായർ: പത്രപ്രവർത്തന രംഗത്തെ സൗമ്യതയുടെയും ആത്മാർത്ഥതയുടെയും മുഖം -കെ.സുരേന്ദ്രൻ
August 17, 2020 11:22 AM
Check Also
Close
-
കമ്മ്യൂണിസ്റ്റ് നേതാവ് പുഷ്പ കമല് ധഹല് നേപ്പാള് പ്രധാനമന്ത്രിDecember 26, 2022 11:50 AM