IndiaLatest

வெள்ளி விழா: சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.

“Manju”

சென்னை : சாந்திகிரி ஆசிரமம் சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று (புதன்கிழமை, 3-1-2023) மாலை சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஜனவரி 5ஆம் தேதி சிஷ்ய பூஜிதா ஜனனி சென்னை வருவதையும், தொடர்ந்து 6 மற்றும் 7ஆம் தேதிகளில் செய்யூர் ஆசிரமத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளையும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆசிரமப் பிரதிநிதிகள் விளக்கினர். ஆசிரம வெள்ளி விழா ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி, ஆசிரம உள்துறை தலைவர் சுவாமி ஆனந்தஜோதி ஞானதபஸ்வி, ஆலோசனைக் குழு புரவலர் டாக்டர்.ஜி.ஆர். கிரண், மருத்துவக் கல்வி உதவிப் பொது மேலாளர் எஸ். விஜயன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button