“குருவின் ஆசி” பெற மகளுக்கு அறிவுரை வழங்கிய கேப்டன் கூல்
இந்திய கிரிக்கெட் கேப்டன் கூல் எம்எஸ் தோனி தனது மகள் சிவாவிடம் ‘குரு’மாவின் ஆசி பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். டில்லி விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் சிறப்பு பகுதியில் குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்தா ஞானதபஸ்வினியை MS தோனி சந்தித்து ஆசி பெற்ற போது தனது மகளை குருவை வணங்கும்படி கூறினார்.
தோனி தனது சொந்த ஊர் பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் போது அங்குள்ள சன்னியாசி சந்நியாசினிகளை சந்தித்து தகவல்களை கேட்டறிந்தார். கேரளாவில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தில் இருந்து குருஸ்தானியா வந்திருப்பதை அறிந்த அவர் தனது குடும்பத்துடன் சிஷ்ய பூஜிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
அவர் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் சிவாவுடன் விருந்தினர் பகுதிக்கு வந்து சிஷ்ய பூஜிதாவை சந்தித்தார்.
மலையாளப் பாடல்களைப் பாடி மலையாளிகள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் கேப்டன் கூலின் மகள், சிஷ்யா பூஜிதாவின் முன் மலையாளத்திலும் ஒரு பாடலைப் பாடினார். சிஷ்ய பூஜிதா, சிவாவின் கைகளை பிடித்து , அவரது படிப்பு குறித்து விசாரித்தபோது, இது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு தருணம் என்று தோனி கூறினார்.
கேரளா சென்றடைந்தால் மீண்டும் குருவை சந்திக்க வருவேன் என்றும் . சிஷ்ய பூஜிதா தனது நாட்டிற்கு வர வேண்டும் என்ற தனது பெரும் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.