IndiaLatest

ஆடுகளத்தில் 2 -ம் நாள்: பரபரப்பான போட்டியில் ரூபன் – சஞ்சய் கடும் போராட்டம்

“Manju”

போத்தன்கோட்: சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் ‘அத்வயா 2k23’ போட்டியின் ஒரு பகுதியாக மாலை நேரத்தில் நடைபெற்ற பூப்பந்து இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ரூபன், சஞ்ஜெய் அணிகள் மோதியதால் விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாளில் ஆரவாரத்துடனும், உற்சாக முழக்கத்துடனும் சூடுபிடித்தது விளையாட்டுக்களம்.

லோகேஸ்வரன் மற்றும் ரூபன் ஆகியோர் ஒரு அணியாக இருந்தனர். மறுபுறம், சஞ்ஜெய் மற்றும் ஜெபஸ்.

ஒவ்வொரு ஸ்மாஷிலும் ‘ரூபன் – சஞ்சய்’ என்ற முழக்கங்கள் ஒலித்தன. ஆகாஷ், அகிலா மற்றும் சோம்ஜித் ஆகியோர் ஒலி பெருக்கியில் வர்ணனை செய்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள்.

 

சீதாலட்சுமி, பார்வதி, விருந்தா, கமலேஸ்வரி மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு. பினோத்.கே மற்றும் இதர ஆசிரியர்கள் கலந்து கொண்டு போட்டிகள் முழுவதும் ஊக்கத்துடன் நடைபெற உற்சாகம் கொடுத்தார்கள்.

ஹவுஸ் சர்ஜசன்சி கோகுல், மற்றும் அருண் போட்டிகளில் நடுவராக இருந்தார்கள். ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதியில் அமல்ராஜ். வி, லோகேஸ்வரன்.கே மற்றும் பெண்களுக்கான போட்டியில் கமலேஸ்வரி, சங்கீதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இரட்டையர் பிரிவில் லோகேஸ்வரன்.கே, ரூபன் நிவாஸ் அணி வெற்றி பெற்றது. பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டி, செஸ், கேரம், டெனி சைட், த்ரோபால், வாலிபால் ஆகிய போட்டிகள் நாளை சனிக்கிழமை நடைபெறுகின்றன.

டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கிரிபால்டன் டர்ஃப், என்ற போத்தான் கோட்டிலுள்ள மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெறும்.

திருவனந்தபுரம் பல்கலைக்கழக ஸ்டேடியத்தில் வரும் 18ம் தேதி தடகள போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

Related Articles

Back to top button