IndiaLatest

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்யபூஜித ஜனனி நாளை சென்னைக்கு வருகிறார்.

“Manju”

 

போத்தன்கோடு: சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்த ஞானதபஸ்வினி வெள்ளிக்கிழமை அன்று சென்னை வருகிறார். மதியம் 1.30 மணிக்கு சென்னை வரும் சிஷ்ய பூஜிதாவை விமான நிலையத்தில் குருபக்தர்கள் வரவேற்பர். பின்னர் சென்னையில் உள்ள குரு பக்தர்களின் இல்லங்களுக்குச் செல்லும் சிஷ்யபூஜித ஜனனி, ஜனவரி 6ஆம் தேதி செய்யூர் ஆசிரமக் கிளையை வந்தடைவார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள். 6 மற்றும் 7ம் தேதிகளில் சிஷ்யபூஜித ஜனனி பக்தர்களுக்கு ஆசிரமத்தில் தரிசனம் நல்குவார். ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழக சட்டபேரவை சபாநாயகர் எம். அப்பாவு துவக்கி வைக்கிறார். அமைச்சர் கே.எஸ். மஸ்தான், திருநாவுக்கரசர் எம்.பி., சாந்திகிரி ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், அருட்தந்தை தாமஸ் ஐசக் உள்ளிட்ட அரசியல், ஆன்மிகம், கலாசாரத் துறைகளின் முக்கியபிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

7ம் தேதி காலை 9 மணிக்கு தியான மடம் மற்றும் தரிசன மண்டபத்தை திறந்து வைப்பதுடன். வெள்ளி விழா வளாகத்திற்கான அடிக்கலும் சிஷ்யபூஜித ஜனனி நாட்டுவார்.

Related Articles

Back to top button