LatestThiruvananthapuram

இன்று சாந்திகிரியில் ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): சாந்திகிரி ஆசிரமத்தில் இன்று ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை தாமரை பர்ணசாலாவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் மலர் அர்ச்சனை நடக்கிறது. துறவிகள், பிரம்மச்சாரிகள் , பிரம்மச்சாரிணிகள் மற்றும் ஆத்ம உறவினர்கள் பிரார்த்தனை சடங்குகளில் பக்தியுடன் பங்கேற்பார்கள். 1999ஆம் வருடம் மே 6 ஆம் நாள் அன்று இரவு 9.20 மணிக்குப் பிறகு நவஜோதி ஸ்ரீகருணாகரகுரு ஆதிசங்கல்பத்துடன் இணைந்தார். அன்றைய தினம் நவஒலி ஜோதிர்தினமாக சாந்திகிரி பரம்பரைகொண்டாடுகிறது.

மே 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் பிறகுதான் குருவின் பூத உடல் இயற்கையில் இணைந்தது . அந்த நேரத்தை சாந்திகிரி பரம்பரை ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’ என்கிற முறையில் ஒவ்வொரு ஆண்டும் நவஒலி ஜோதிர் தினத்துடன் அனுசரிக்கப்படுகிறது. அன்று, மத்திய ஆசிரமம் மற்றும் ஆசிரம கிளைகளில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் நடைபெறும். இத்துடன் இவ்வருட நவஒலி ஜோதிர் தின – சர்வமங்கள சுதின – கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன.

Related Articles

Back to top button