KeralaLatest

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள்

“Manju”

போத்தன்கோடு: கேரள சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று (ஜூன் 29, 2024 சனிக்கிழமை) நடைபெற்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 19வது batch மாணவர்களான கவுசிக் விக்னேஷ் தலைவராகவும் முத்துப் பிரியதர்ஷினி.எஸ் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றும் செயலாளராக சீதாலட்சுமி. டி.எஸ்., இணைச் செயலாளராக யோகேஷ் .எம்., பல்கலைக்கழக யூனியன் கவுன்சிலராக சோம்ஜித் ஏ.எஸ்., நுண்கலைத்துறைச் செயலாளராக திவ்யதர்ஷினி. ஜி.எ., விளையாட்டுத்துறைச் செயலாளராக பிருந்தா. ஜி.பி., மற்றும் இதழியல்துறை ஆசிரியராக ஏஞ்சலினா செபாஸ்டியன்( 20 வது batch) ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி பெற்றனர்.

மேலும் ஒவ்வொரு batch- லிருந்தும் மாணவர் பிரதிநிதிகளாக கதிர் ஆனந்த் . டி.எம்.(19th batch), தர்மதுரை.பி.(20th batch), அஞ்சு ஸ்ரீ. எம்.ஆர்(21st batch) மற்றும் கோகுல செல்வம்(22nd batch) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் கல்லூரி யூனியனில் உறுப்பினர்களாகவும் பொறுப்பு வகிப்பார்கள்.

வழக்கத்திற்கு ஏற்ப இம்முறையும் முற்றிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதாக தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற பேராசிரியர் ஷீஜா.என். அறிவித்தார் .

Related Articles

Back to top button