IndiaLatest

சாந்திகிரி ‘மக்கள் ஆரோக்கியம்’ இலவச சித்த மருத்துவ முகாம் செய்யூரில் நடைபெற உள்ளது.

“Manju”

சென்னை: கடந்த இருபத்தைந்து ஆண்டுகால சேவையை தமிழகத்தில் நிறைவு செய்யும் சாந்திகிரி ஆசிரமத்தின் புதிய மக்கள் சேவைத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூரில் தொடங்கப்படவுள்ளது. சாந்திகிரியில் ‘மக்கள் ஆரோக்கியம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி தெரிவித்தார்.

வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளையில் ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதல் இலவச சித்த மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். சாந்திகிரி ‘மக்கள் ஆரோக்கியம்’ இலவச சித்த மருத்துவ முகாமை பிரபல நடிகர் தலைவாசல் விஜய் தொடங்கி வைக்கிறார். முகாமிற்கு முன்னோடியாக, ஜனவரி 2-ஆம் தேதி முதல் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவை இணைந்து சுகாதார புள்ளிவிவரக் கணக்கெடுப்பு செய்யூரில் நடத்தப்படும். தொடர்ந்து 7ம் தேதி நடக்கும் முகாமில், பொது மருத்துவம், சிறப்பு மருத்துவம், அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், தோல் நோய்கள் மற்றும் குழந்தை மருத்துவம் துறை சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் மூட்டு தேய்மான நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கான சிறப்பு ஆலோசனையும் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனை மட்டுமின்றி மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். கல்லுாரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன் தலைமையிலான சித்த மருத்துவ நிபுணர்கள் குழு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். அன்று காலை 8 மணிக்கு பதிவு தொடங்கும்.

சாந்திகிரி ஆசிரமம் என்பது பாரதத்தின் தனித்துவமான மருத்துவ நடைமுறையான சித்த மருத்துவத்தை உலகளவில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாகும். திருவனந்தபுரம் போத்தன்கோட்டில் ஆசிரம நிறுவனர் நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் வழிகாட்டுதலின்படி தொடங்கப்பட்ட சித்த மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. பாரம்பரிய முறையிலும் முற்றிலும் அறிவியல் சார்ந்த அடிப்படையில் சித்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் ஏற்கனவே உலக கவனத்தைப் ஈர்த்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் சித்த மருத்துவக்கல்வி (பி.எஸ்.எம்.எஸ்) கற்பிக்கும் முதல் சித்த மருத்துவக் கல்லூரியும் சாந்திகிரிதான்.

Related Articles

Back to top button