LatestThiruvananthapuram

தாமரை உருவில் மேடை

“Manju”

போத்தன்கோடு(திருவனந்தபுரம்) : பிரபஞ்ச தாமரையின் சூசகமாக சாந்திகிரி ஆசிரமத்தில் நவீன மாதிரியில் மேடை காட்சியளிக்கிறது. சாந்திகிரி ஆஸ்ரமம் ஸ்தாபககுரு நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் பூத உடல் விட்டு புகழுடல் எய்திய நிகழ்வின் நினைவு தின கொண்டாட்டங்கள் நவஒலி ஜோதிர் தின விழா நிகழ்ச்சிகளின் பாகமாகிறது இந்த தாமரை மேடை. வட்டவடிவத்தில் உள்ள ஒருமைப்பாட்டின் கோயில் (சககரன மந்திரம்) மண்டபத்தில் தாமரை மலரின் மாதிரியில் மேடை உருவாக்கப்பட்டுள்ளது. தாமரை இதழ்கள் விரிந்து நிற்கும் மேடையும் அந்த வட்ட வடிவில் தாமரை இதழ்களால் அலங்காரம் கொண்டு சூழலில் மேற்கு வங்க கவர்னர் டாக்டர்.சி.வி. ஆனந்தபோஸ் முன்னிலையுள்ள விருந்தினர்கள் அமர்ந்து சிறப்பிப்பது. மேடையின் முன்புறமாக அமைக்கப்பட்டிருக்கும் சிறு மேசைகளில் தாமரை இலைகளுடன்கூடி தாமரைப் பூக்கள் அழகான காட்சி தரும். காலை 8 மணிக்கு திறப்பு விழா. மே 6 காலை 10 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு, மதியம் 2.30 மணிக்கு நவஒலி ஜோதிர்த்தினம் மாநாடு நடைபெறும். கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் திறந்துவைக்கும் மாநாட்டில் கலாச்சார, அரசியல், சமூக, ஆன்மீக அரங்கில் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

Related Articles

Back to top button