KeralaLatest

குமார்.எஸ் மறைவு

“Manju”

போத்தன்கோடு ( திருவனந்தபுரம்): திருவனந்தபுரம் சாந்திகிரி ஆசிரமம் போத்தன் கோடு அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பௌர்ணமி வீட்டில் வசிக்கும் குமார் எஸ் (73 வயது) இன்று (5.07.2023) மாலை 5 மணி அளவில் மரணம் அடைந்தார். வயோதிக காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் தொடர்ந்து வந்தார். இவரது பூர்வீகம் திருவனந்தபுரம் கரமனை. தொழில் நிமித்தம் தமிழகத்தில் தங்கி இருந்தார். மனோமணி இவரது மனைவி. சங்கீத் மஞ்சு (ஆசிரியை, சாந்திகிரி வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி) இவரது மகள். ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் சங்கீத் கண்ணன் இவரது மகன்கள். டாக்டர்.பி.ஹரிஹரன் (துணை முதல்வர், சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி) இவரது மருமகனும் பவானி பாலு மற்றும் இந்து கண்ணன் இவரது மருமகள்கள் ஆவார். பேரக்குழந்தைகள்: பிரணவ் கணேஷ், அதிரா, அக்ஷரா, ஆதவ் குமார் மற்றும் ஹர்ஷினி.
இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும்

Related Articles

Back to top button