சென்னை: சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் எம். அப்பாவு அவர்கள் அழைக்கப்பட்டார். ஆசிரம வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, ஆசிரம ஆலோசனைக் குழுவில் கல்விப்பிரிவு ஆலோசகர் டாக்டர்.ஜி.ஆர். கிரண், ஆசிரம மக்கள் தொடர்பு உதவிப் பொது மேலாளர் மனோஜ் டி., சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் தமிழக சபாநாயகரை சட்டப்பேரவைக்கு வந்து அழைத்தனர். ஜனவரி 7 ஆம் தேதி, குருஸ்தானிய அபிவந்திய சிஷ்ய பூஜிதா அவர்கள் சென்னை செய்யூர் ஆசிரமத்தில் தரிசன மண்டபத்தைத் திறந்து வைப்பார்கள் .
Related Articles
Check Also
Close