போத்தன்கோடு : சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி பெற்றோர்- ஆசிரியர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 19/11/2022 சனிக்கிழமை காலை 11 மணிக்கு கல்லூரி அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பி.சந்தோஷ் குமார், துணைத் தலைவராக ஹன்ஸ் ராஜ். ஜி. ஆர் பெற்றோர்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெற்றோர்- ஆசிரியர் சங்க செயலாளராக பேராசிரியர் டாக்டர்.ஜே.நினப்ரியா மற்றும் டாக்டர் சிவவெங்கடேஷ் இணைச் செயலாளராகராகவும் பொருளாளராக எல். சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பேராசிரியர். டாக்டர். கே.வி கிருஷ்ணவேணி, டாக்டர். கே. நமசிவாயமும் தேர்வாகியுள்ளனர். கேரள சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்ட பெற்றோர் – ஆசிரியர் சங்கம் பல்வேறு தொகுதிகளின் பிரதிநிதிகளாக டாக்டர். மீனாட்சி.பி., ராணி. பிஆர்., அர்ச்சனா.பி.ராஜ்., சபிதா.எம்., வீரய்யா மற்றும் அண்ணாமலை. எஸ்., ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர். டாக்டர்.பி. ஹரிஹரன் கமிட்டியின் புரவலராக உள்ளார். கல்லூரி மாணவர்கள் ஒன்றிய ஆலோசகர் ஷீஜா.என், தேசிய சேவை திட்ட அலுவலர் ஷிபு.பி., ஆகியோர் பதவிநிலை உறுப்பினர்களாக இருப்பார்கள். அனைத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் அடுத்த கூட்டம் டிசம்பர் 23, 2022 அன்று நடைபெறும்.
Related Articles
അടച്ചുപൂട്ടല് ലംഘനം: സംസ്ഥാനത്ത് ഇന്ന് 1681 കേസുകള്; 576 അറസ്റ്റ്; പിടിച്ചെടുത്തത് 43 വാഹനങ്ങള്
September 11, 2020 7:00 PM
Check Also
Close
-
‘കേരളത്തിന്റെ സൈന്യം’ പത്തനംതിട്ടയില്October 17, 2021 9:30 AM