இக்கூட்டத்தை வெள்ளி விழா ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி துவக்கி வைக்க சென்னை ரீஜன் தலைமை சுவாமி மனுசித் ஞான தபஸ்வி தலைமை தாங்கினார். வரவேற்பு குழுவின் பேட்ரனாக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அவர்கள் ஆவார். இக்கூட்டத்தில் ஊராட்சி, ஒன்றிய, மக்கள் பிரதிநிதிகள் பொது நல சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பல்வேறு துறைகள் சார்ந்த நபர்கள் விருப்பம் தெரிவித்து அனுமதி தந்துள்ளனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் 22 ஆலோசனை குழு உறுப்பினர்களும் மற்றும் சென்னை, செய்யூர் பகுதி ஆசிரம நல விரும்பிகள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்ள, வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் தனது செயல்பாடுகளின் ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் சுவாமி ஆனந்த ஜோதி ஞான தபஸ்வி பிரசாதம் வழங்க பிரம்மச்சாரி மனு ஒருங்கிணைத்தார்.
செய்யூர் பகுதி வியாபாரிகள் சங்க பிரதிநிதி கனகசபை நன்றி நவில இக்கூட்டம் மதியம் 2.00 மணிக்கு நிறைவுற்றது.