போத்தான்கோடு: சாந்திகிரி ஆசிரம நிறுவனர் நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் நவஒலி ஜோதிர் தினம்-25 நெருங்கி வரும் வேளையில், குரு வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த அவதூத வழி மற்றும் தீவிர துறவறங்களைக் கடந்து சென்ற அந்த தியாக பாதைகளின் வழியாக மீண்டும் ஒரு பயணம். சாந்திகிரி ஆத்ம வித்யாலயாவின் வழிகாட்டுதலில், ஆன்மிக உணர்தல், அறிவு மற்றும் அனுபவத்திற்காக குருவின் தன்னலமற்ற வாழ்வின் மூலம் சீடனுக்கு சுயசரணாகதியாக ‘சாந்திகிரி அவதூத யாத்திரை’ மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
அவதூதயாத்திரை மே 1-ஆம் தேதி காலை குரு பிறந்த ஊரான சந்திரூரில் இருந்து புறப்பட்டு, கன்னியாகுமரிக்கு சென்று பிறகு மத்திய ஆசிரமம் போத்தன் கோடு சாந்திகிரி ஆசிரமத்தை மே 4-ஆம் தேதி வந்தடைகிறது. குரு பிறந்ததில் இருந்து பல்வேறு ஆன்மீக அனுபவங்களை வழங்கிய இருபத்தைந்து யாக பூமிகளை அவதூதயாத்திரை கடக்கும். அவதூத யாத்திரை பற்றிய கூடுதல் செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு சாந்திகிரி நியூஸ் மற்றும் சாந்திகிரி யூடியூப் சேனலைப் பார்வையிடவும்.
www.youtube.com/@SanthigiriNews |