திருவனந்தபுரம்: நவம்பர் 7ம் தேதி சாந்திகிரி ஆசிரமத்தின் ஐந்து புதிய கிளைகளில் தீபம் ஏற்றப்படுகிறது. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோனி, வடகரா ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் மைசூர் மற்றும் ராஜஸ்தானில் தேவகர் பகுதியிலும் பிரார்த்தனை ஆலயங்கள் தொடங்கப்படுகின்றன. மைசூர் கிளை ஆசிரம பிரார்த்தனை கூடத்தில் சுவாமி விஸ்வபோத ஞானதபஸ்வி, பத்தனம்திட்டா மாவட்டம் கோனி கிளையில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் சுவாமி ஜனதீர்த்தன் ஞானதபஸ்வி, ஆலப்புழா தம்பகச்சுவட்டில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் சுவாமி ஜகத்ரூபன் ஞானதபஸ்வி, வடகரை கிளையில் துவங்கும் பிரார்த்தனை கூடத்தில் சுவாமி அர்ச்சித் ஞானதபஸ்வி. ராஜஸ்தானில் உள்ள தேவகாட் கிளையில் பிரார்த்தனை கூடத்தில் நித்யசைதன்னியன் ஞானதபஸ்வி என ஐந்து இடங்களிலும் காலை 9.00 மணிக்கு பிரதிஷ்டா கர்மங்கள் நிறைவேற்றிய பின்னர் தீபம் ஏற்றி வைப்பார்கள். இந்த விழா காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து மாலை 6 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெறும். ஆலப்புழாவில் பிரார்த்தனை கூடம் திறப்பது தொடர்பாக பிரபலங்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 7ம் தேதி ஹரிபாடு கிளை ஆசிரம பிரார்த்தனை ஆலயம் திறக்கப்படும்.