LatestThiruvananthapuram

குருமித்ரன் சுவாமிக்கு யாத்ரா மொழி: அமைதியான அந்த முகம் இனி நினைவில் மட்டும்

“Manju”

திருவனந்தபுரம் (போத்தன்கோடு ): சாந்திகிரி ஆசிரமம் அமைப்பு செயலாளர் சுவாமி குருமித்ரன் ஞான தபஸ்வியின் இறுதி பயணத்திற்கு சாந்திகிரி ஆஸ்ரமம் சாட்சி ஆக, இனி அமைதியான அந்த முகம் நம் மனதில் மட்டும். இன்று மாலை 2.00 மணிக்கு பிரார்த்தனை நடந்த சடங்குகளில் அகண்ட நாம மந்திரங்கள் முழங்க பக்தர்களின் பிரார்த்தனையுடன் மலர்சமர்ப்பணம் நடைபெற்றது. ஆன்மீக மண்டலத்தில் பிரத்யேக பந்தலில் இருந்து சுவாமியின் உடல் குருவின் இரண்டாவது பூங்காவில் இதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் உடல் அடக்கம் நடந்தது. ஆசிரமம் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச்செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி மற்றும் மற்ற சன்னியாசி சன்னியாசினிகள் சடங்குகளுக்கு தலைமை தாங்கினார்கள். தங்கள் அன்பான சுவாமிக்கு இறுதி வழி அனுப்பி வைத்தனர். ஜன பிரதிநிதிகளும், கலாசார சமூக தலைவர்களும், உள்ளூர் மக்களும், சேர்த்தலையில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள் சுவாமியை இறுதி யாகக் கண்டு அன்பின் அமைதியான நினைவுகளுடன் திரும்பினார்கள் . சுவாமி இனி அவர்கள் நினைவில் மட்டும்.

Related Articles

Back to top button