சென்னை : சாந்திகிரி ஆசிரமம், செய்யூர் கிளையின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் பகுதியாக இன்று (டிசம்பர் 27) மதியம் 12.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் ஆசிரம பிரதிநிதிகள் தமிழ் நாட்டின் பல்வேறு ஊடக பிரதிநிதிகளுக்கு வெள்ளி விழா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகளை தெரிவித்தனர் .பின்னர் விருந்து உபசரிப்பும் நடந்தது. சாந்திகிரி ஆசிரமம், செய்யூர் கிளையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ளி விழா ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, ஆசிரமம் கிளையின் நிர்வாகத்தலைமை வகிக்கும் சுவாமி மனுசித் ஞானதபஸ்வி, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரம்மச்சாரி அகில் ஜெ.எல்., ஆசிரம ஆலோசனை குழுவில் கல்விப்பிரிவு ஆலோசகர் டாக்டர்.ஜி. ஆர்.கிரண், உதவி பொது மேலாளர் எஸ். விஜயன், சாந்திகிரி மருத்துவக்கல்வி பிரிவு, ஊடகத்தொடர்பு மேலாளர் மகேஷ் எம். ஆகியோர் வெள்ளி விழா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகளை விளக்கினர். 2024 ஜனவரி 5 முதல் 8 வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகளும், வழிபாடு நடத்தும் ஆராதனாலயம் திறப்பு விழா, சிறப்பு வழிபாடுகள், ஆயுர்வேத & சித்தா மருத்துவமனை மற்றும் சாந்திகிரி வித்யாபவன் (பள்ளிக்கூடம் )ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டுதலும் நடைபெறும். வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளையொட்டிநடைபெறும் பொது கூட்டங்களில் பல்வேறு அரசியல் சமூக மத பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.