IndiaLatest

கேரள அமைச்சர் ஜி. ஆர். அனில் சென்னை வருகை; தமிழக அமைச்சர் மனோ. தங்கராஜ் வரவேற்றார்.

“Manju”

சென்னை: சாந்திகிரி ஆசிரமத்தின் சென்னை கிளையின் வெள்ளி விழாவில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி. ஆர். அனில் அவர்கள் சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் பூங்கொத்து நல்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கேரள அரசு பிரதிநிதி அனு.பி.சாக்கோ, சாந்திகிரி ஆசிரம மக்கள் தொடர்பு முதுநிலை மேலாளர் மனோஜ் டி. ஆகியோர் உடனிருந்தனர்.காலை உணவுக்கு பின், அமைச்சர் மற்றும் குழுவினர், செய்யூர் கிளை ஆசிரமத்திற்கு புறப்பட்டனர்.

இன்று காலை 11 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. அமைச்சர் மனோ. தங்கராஜ் அவர்கள் வெள்ளி விழா மாநாட்டை துவக்கி வைக்கிறார். . ஜி. செல்வன் எம்.பி அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில், கேரள மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர். அனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ‘மக்கள் நலம்’ திட்டத்தின் கீழ் இலவச சித்த மருத்துவ மருத்துவ முகாமை திரைப்பட நடிகர் திரு.தலைவாசல் விஜய் தொடங்கி வைக்கிறார். பனையூர் பாபு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, சுவாமி நிர்மோகாத்மா ஞான தபஸ்வி, சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சுவாமி சிநேத்மா ஞான தபஸ்வி, பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் சென்னை ஆர்ச்டியோசீஸ் பேராயர் டாக்டர் சாமுவேல் மார் தியோபிலிஸ், சகோதரி. ஜான்சி (பிரம்மகுமாரிகள்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மிசோரம் முன்னாள் ஆளுநர். திரு. கும்மனம் ராஜசேகரன், முன்னாள் எம்.பி விஜிலா சத்யநாத், காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் விஸ்வநாதன் பெருமாள், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே. கிருஷ்ணதாஸ், கோகுலம் குழும நிறுவனங்களின் தலைவர் கோகுலம் கோபாலன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா இயக்குநர் பேராசிரியர். டாக்டர். மீனாகுமாரி, சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர். டாக்டர். டி. கே. சௌந்தரராஜன், சாந்திகிரி ஆசிரம கலை & கலாச்சாரப் பிரிவு ஆலோசனைக் குழு புரவலர், டாக்டர். டி.எஸ். சோமநாதன், ஆலோசகர்கள் சுப்பலட்சுமி பாபு, குஞ்ஞிக்காடு ராமச்சந்திரன், மதுராந்தகம் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். பிரவீன்குமார், செய்யூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆர்.செந்தில் குமார், சாந்திகிரி உலக பண்பாட்டு மறுமலர்ச்சி மைய முதுநிலை மேலாளர் அட்வ.கே.ராஜேஷ், மாத்ருமண்டலம் சென்னை மண்டல குழு அமைப்பாளர் எஸ். வளர்மதி, செய்யூர் கிராம மக்கள் நலச் சங்கத் தலைவர் சி.கனகசபை, திராவிட இயக்க முன்னணி பேச்சாளர் திரு.நாஞ்சில் சம்பத், சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளை ஒருங்கிணைப்புக் குழு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் டி.பக்தன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Related Articles

Back to top button