LatestThiruvananthapuram

நவ ஒலி ஜோதிர் தினம்-24: விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குருவின் பூங்கா

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): குருவின் பாத ஸ்பரிசம் ஏற்றுக் கொண்டு தன்னை அழகு படுத்திக் கொண்டது இப்பூங்கா . குருவின் வார்த்தைகளும் பார்வையும் நடையும் உடையும் பாவனைகளும் அனைத்தும் இங்குள்ள ஒவ்வொரு மணல்துகள்களிலும் நிறைந்து நிற்கிறது. மற்ற பூங்காக்களில் இருந்து வித்தியாசமானது இங்குள்ள பழ மரங்களும், மலர் கொடிகளும் செடிகளும் மற்றும் அழகு தாவரங்களும். நவஒலி ஜோதிர்தினம் 24 வது விழா நிகழ்ச்சிகளின் பகுதியாக குருவின் பூங்காவும் அணிவகுத்து நிற்கிறது. பிரம்மச்சாரிணிகளின் மேற்பார்வையில் சாந்திகிரி குருமஹிமா பெண் குழந்தைகள் தென்னை மர குருத்தோலைக் கொண்டு தோரணம் கட்டியும் பல்வேறு மலர் அலங்காரங்களும் அமைத்து குருவின் பூங்காவும் நவ ஒலி ஜோதிர் தினம் சர்வ மங்கள சுப நிகழ்வாக தன்னையும் இணைத்துக் கொள்ளும் காட்சி காண்போரை ஆனந்த வசப்படுத்தும்.

Related Articles

Back to top button