செய்யூர்:சென்னை வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக, செய்யூர் கிளை ஆசிரமத்திற்கு வந்த குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவை, சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சுவாமி ஸ்நேகாத்ம ஞான தபஸ்வி, சுவாமி மனுசித் ஞான தபஸ்வி மற்றும் குருபக்தர்கள் சிறப்பாக வரவேற்றனர்.
செய்யூரிலிருந்து பாரம்பரிய இசைக்கருவிகளுடன் கூடிய ஊர்வலம் ஆசிரம வாயிலை அடைந்தபோது, மழைத்துளிகளுடன் குரு மந்திரத்தொனிகளும் ஒருங்கே முழங்கின. சந்தன மணம் வீசிய ஆசிரம வளாகம், முத்துக் குடைகளால் வண்ணமயமாகக் காட்சி அளித்தது. இந்த வரவேற்பை வழங்க ஆயிரக்கணக்கான குருபக்தர்கள் அனைவரும் தங்களின் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தனர்.
குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா பூரண கும்பத்துடன் வரவேற்கப்பட்டார். பிரார்த்தனை மண்டபத்தின் முன் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, சிஷ்ய பூஜிதா தரிசன மந்திரத்திற்குச் சென்றார். தரிசன மந்திரத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிழாவிற்குப் பின், சென்னை பக்தர்களின் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.