சென்னை: செய்யூர் சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டில் தமிழ்நாடு மாநில பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பிரபல நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோருக்கு ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி வெள்ளிவிழா விருதினை வழங்கி சிறப்பித்தார். அமைச்சர் ஜி.ஆர். அனில், கும்மனம் ராஜசேகரன், பேராயர் டாக்டர். சாமுவேல் மார் தியோபிலிஸ், சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, கோகுலம் கோபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் சாந்திகிரி ஆசிரமத்தால் தொடங்கப்பட்ட ‘மக்கள் நலம்’ என்ற இலவச சித்த மருத்துவ முகாமையும் தலைவாசல் விஜய் தொடங்கி வைத்தார்.
பல்வேறு படங்களில் பல வேடங்களில் நடித்தாலும், ‘யுகபுருஷன் ‘ என்ற படத்தில் ஸ்ரீ நாராயணகுருவாக நடித்தபோது ஆன்மீக தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது என்றும் சாந்திகிரி ஆசிரமத்தைப் பற்றி முதலில் சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் சாந்திகிரி ஆசிரமத்தின் ஹெல்த்கேர் சென்டர் மூலம் தெரிந்து கொண்டார் என்றும் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்றதன் மூலம், ஸ்ரீ கருணாகர குருவைப் பற்றியும், சாந்திகிரியின் ஆன்மிகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது என்றும் கருத்து தெரிவித்தார்.