LatestThiruvananthapuram
சுகாதார பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது
போத்தன்கோடு: சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லுாரி தலைமையில், சுகாதார பரிசோதனை முகாம் நடந்தது. கரூர் டி. ஆர் எஸ் பாலர் பள்ளி மாணவர்களிடையே பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர். டாக்டர். டி.கே.சௌந்தரராஜன் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரகாஷ் எஸ்.எல்., டாக்டர். V A மேகலா , Dr. பி நிர்மலா தேவி, டாக்டர். பி.ராமலட்சுமி குழந்தைகளை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
முகாமில் டிஆர்எஸ் கிட்ஸ் பாலர் பள்ளி முதல்வர் ஆனந்த் பி, மக்கள் தொடர்பு மூத்த அமைப்பாளர் வேணுகோபால் கே.சி. முகாமில் கலந்து கொண்டனர். காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற முகாமில் சுமார் 100 குழந்தைகள் கலந்து கொண்டனர்.