சென்னை: முதன்முறையாக செய்யூருக்கு வருகை தரும் சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவை வரவேற்க செய்யூர் கிராமமே தயாராகி வருகிறது. செய்யூர் ஆசிரமம் நகரத்தின் சலசலப்புகளிலிருந்து விலகி இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது. சுவாமி மனுசித் ஞான தபஸ்வி, ஐந்திற்கும் மேற்பட்ட சுற்றுப்புறத்திலுள்ளவர்களும் மற்றும் பிரார்த்தனைக்கு வரும் சுமார் பத்து குடும்பங்கள் என இவர்கள் மட்டுமே ஆசிரமத்தில் இருந்தனர், ஆனால் கடந்த ஒரு மாதமாக அது இல்லை. பல்வேறு கிளை ஆசிரமங்களிலிருந்தும், மைய ஆசிரமத்திலிருந்தும் குருதர்ம பிரகாச சபை உறுப்பினர்கள் வருகையால் அப்பகுதியின் முகமே மாறியது. மஞ்சள் அங்கி அணிந்த சந்நியாசிகளைப் பார்த்து அப்பகுதி மக்கள் ஆசிரமத்துக்கு வரத் தொடங்கினர்.
சேறும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலமான செய்யூர் மண்ணில் கையும் மெய்யும் மறந்து பணிபுரிய சன்னியாஸ்திரிகள் மற்றும் குருபக்தர்களுடன் உள்ளூர் மக்களும் ஒன்றிணைந்ததால், எந்த ஆச்சாரியருக்கும் கிடைக்காத வரவேற்பை இந்த நிலம் காணப்போகிறது. தினமும் காலையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது. சுவாமி பாசுர ஞான தபஸ்வி தான் தினமும் மக்களை வரவேற்கும் பொறுப்பிற்கு தலைமை வகிப்பவர். ஸ்வாமி ஜனதீர்த்தன் ஞான தபஸ்விக்கு அனைவரும் தங்கும் விடுதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுவாமி சித்தசுத்தன் ஞான தபஸ்வியும், சுவாமி முக்தசித்தன் ஞான தபஸ்வியும் சமையல் காரியங்களை வழிநடத்த உள்ளனர். சுவாமி மதுரநாதன் ஞான தபஸ்விக்கு கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுவாமி சத்யசித் ஞான தபஸ்விக்கு மருத்துவ முகாமை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனனி பிரார்த்தனா ஞான தபஸ்வினி, ஜனனி மங்கள ஞான தபஸ்வினி மற்றும் ஜனனி சாந்திபிரபா ஞான தபஸ்வினி ஆகியோர் ஆசிரமம் தொடர்பான பிற பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். சுவாமி ஆனந்தஜோதி ஞான தபஸ்வி மற்றும் சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி ஆகியோர் சில்வர் ஜூபிலி கொண்டாட்டங்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்காக சென்னையில் உள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வருகிறார்.
குருவின் உருவப்படம் நிறுவப்படும் தியான மடம் மற்றும் தர்ஷன் மந்திம் ஆகியவை முடிவடையும் தருவாயில் உள்ளன. ‘மக்கள் ஆரோக்கியம்’ என்ற பெயரில் நடத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் தலைமையில் 2024 ஜனவரி 2-ஆம் தேதி முதல் மருத்துவக் கணக்கெடுப்பு தொடங்கப்படும். குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா ஜனவரி 5ஆம் தேதி சென்னையை வந்தடைகிறார். 6 -ம் தேதி செய்யூரில் வந்தடைவார். 7 -ம் தேதி விளக்கேற்றும் நிகழ்வு. இவ்விழாவில் அரசியல், சமூக, கலாசாரத் துறைகளின் முக்கியஸ்தர்கள் உட்பட ஐந்தாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என செய்யூர் கிளை ஆசிரமத் தலைவர் சுவாமி மனுசித் ஞான தபஸ்வி தெரிவித்தார்.