IndiaLatestThiruvananthapuram
சன்னியாசதீட்சை ஆண்டுவிழா; சத்சங்கம் துவங்கியது
போத்தன்கோடு: அக்டோபர் 15 ம் தேதி சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெறவுள்ள சன்னியாச தீட்சையின் 37 வது ஆண்டு விழா தொடர்பான சத்சங்கம் துவங்கியது. ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி அவர்கள் அக்டோபர் 6 முதல் 14 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஆசிரம அமைப்பு செயலாளர் சுவாமி குருமித்திரன் ஞானதபஸ்வி, சன்னியாசி, சன்னியாசினிகள், ஆலோசனைக் குழு – கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு ஆட்சிக்குழு அதிகாரிகள் முதலியோர் இந்த சத்சங்கங்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கலந்து கொண்டு உரையாற்றுவார்கள். மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியயை ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி தொடங்கி வைக்கிறார். சாந்திகிரி சன்னியாச பாதுகாவலர் சங்கத்தின் மேற்பார்வையில் இந்த சத்சங்கம் நடத்தப்படுகிறது.