IndiaLatestThiruvananthapuram

சன்னியாசதீட்சை ஆண்டுவிழா; சத்சங்கம் துவங்கியது

“Manju”

போத்தன்கோடு: அக்டோபர் 15 ம் தேதி சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெறவுள்ள சன்னியாச தீட்சையின் 37 வது ஆண்டு விழா தொடர்பான சத்சங்கம் துவங்கியது. ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி அவர்கள் அக்டோபர் 6 முதல் 14 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஆசிரம அமைப்பு செயலாளர் சுவாமி குருமித்திரன் ஞானதபஸ்வி, சன்னியாசி, சன்னியாசினிகள், ஆலோசனைக் குழு – கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு ஆட்சிக்குழு அதிகாரிகள் முதலியோர் இந்த சத்சங்கங்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கலந்து கொண்டு உரையாற்றுவார்கள். மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியயை ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி தொடங்கி வைக்கிறார். சாந்திகிரி சன்னியாச பாதுகாவலர் சங்கத்தின் மேற்பார்வையில் இந்த சத்சங்கம் நடத்தப்படுகிறது.

Related Articles

Back to top button