IndiaLatest

புத்துணர்வு பெற்றன விளையாட்டு மைதானங்கள் . சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் இனி வரும் நாட்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கானது.

“Manju”

போத்தன்கோடு:  சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்ட ‘அத்வயா 2k23’ கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, விளையாட்டிற்கான போட்டிகள் இன்று வியாழன் 14, டிசம்பர் – 2023 அன்று தொடங்கப்பட்டது. காலையில் நடைபெற்ற மாணவர், மாணவியருக்கான பூப்பந்து போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. நாளை சதுரங்கம், கேரம், டெனி குயட், த்ரோபால், கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். கால்பந்து போட்டி டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணிக்கு போத்தன்கோட்டிலுள்ள மைதானத்தில் நடைபெறும். கால்பந்து போட்டியை விளையாட்டுப் பயிற்சி ஆசிரியரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளருமான திரு. பினோத்.கே துவக்கி வைக்கவிருக்கிறார்.

18- தேதி, திருவனந்தபுரம் பல்கலைக்கழக மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடைபெறும்.

Related Articles

Back to top button