புதுதில்லி/போத்தன்கோடு: பிரதமர் நரேந்திர மோடியின் 71 -ம் பிறந்த நாள் முன்னிட்டு இன்று போத்தன்கோடு சாந்திகிரி ஆசிரமத்திலும் புதுதில்லி கிளை ஆசிரமத்திலும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போத்தன்கோடு சாந்திகிரி ஆசிரமத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கம்பம் டி.கெ.எஸ் குழுமம் தலைவர் கெ.சரவணன் அன்னதான சமர்ப்பணம் செய்துள்ளார். புதுதில்லி கிளை ஆசிரமத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்திற்கு சுவாமி சாயுஜ்நாத் தலைமை வகித்தார். சாந்திகிரி ஆசிரமத்தின் பொது காரியதரிசி சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் பாரதத்தின் தேசியத்தையும் பரந்த நோக்கில் பாதுகாப்பு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவரால் இயலுமாறு ஆகட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.
திருவனந்தபுரம் கவடியார் உதய் பேலஸ் கன்வென்ஷன் சென்ட்ரில் பிரதமரின் பிறந்த நாள் பாகமாக 71 பிரமுகர்கள் சேர்ந்து 71 தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பொது காரியதரிசி சுவாமி பங்கேற்று தீபம் ஏற்றினார். கர்தினால் பாசிலியோஸ் கிளிமிஸ் கத்தோலிக்க பாவ, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முன் தலைவர் ஜி.மாதவன் நாயர், மிசோரம் மாநில முன் ஆளுநர் குமணம் ராஜசேகரன், பா.ஜ.க. முன் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ், முன்னாள் டிஜிபி டி.பி.சென்குமார் ஐபிஎஸ், காந்தி நினைவு நிதி தலைவர் டாக்டர்.என். ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் ஆதித்யா வர்மா முதலான பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குஜராத் மாநிலத்தில் மேஹ்சானா மாவட்டத்தில் வட்நகரில் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 காலையில் 11 மணிக்கு அனுஷம் நட்சத்திரத்தில் தாமோதர்தாஸ் மூன்சந்த் மோடி மற்றும் ஹீரா பென் அவர்களின் மூன்றாவது குழந்தையாக நரேந்திர தாமோதர் தாஸ் மோடி பிறந்தார்.