IndiaLatest

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் கல்லூரி தின விழாக் கொண்டாட்டம்

“Manju”

 

போத்தன்கோடு: சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் கல்லூரி தின விழா நடைபெற்றது. சாந்திகிரி ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி இவ்விழாவைத் துவக்கி வைத்தார்.

பிரபல பின்னணி பாடகர் அரவிந்த் வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையையும், பார்வையாளர்களையும் தன் பாடல்களால் மெய்சிலிர்க்க வைத்த அவர், ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது தந்தையும் பிரபல மலையாள பின்னணிப் பாடகருமான திரு. வேணுகோபால் அவர்கள் பாடிய ‘ஒன்னாம் ராகம் பாடி’ என்று தொடங்கும் மலையாளப் பாடலைப் பாடினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார், சாந்திகிரி ஹெல்த்கேர் & ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சுவாமி குருசவித் ஞான தபஸ்வினி, ஜனனி சுக்ரிதா ஞான தபஸ்வினி, ஜனனி கருணாதீப்தி ஞான தபஸ்வினி, மாணிக்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் குதிர குளம் ஜெயன், நல மேம்பாட்டு நிலைக்குழு தலைவர் ஆர். ஜாஹிரத் பீவி, சாந்திகிரி ஆசிரம கலை கலாச்சார ஆலோசகர் சபீர் திருமலை, டாக்டர் ஜி.மோகனாம்பிகை, ஜோதி உதயபானு, ஷாஜி. இ.கே., டாக்டர். அனுபமா.கே.ஜே, PTA அலுவலக பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார், ஹன்ஸ்ராஜ்.ஜி.ஆர் மற்றும் மாணவர் பிரதிநிதி நன்மா.எல். ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

மதிய உணவிற்குப் பின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு இன்னிசைப் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

புகைப்படம்: சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தின விழாவை ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி தொடங்கி வைக்கிறார்.

Related Articles

Back to top button