KeralaLatest

புனித பயணத்தில் சட்ட மேதை சிலைக்கு மரியாதை

“Manju”

செய்யூர்: செய்யூரிலுள்ள சாந்திகிரி கிளை ஆசிரமத்திற்கு பயணித்தபோது இந்திய அரசியலமைப்பு சிற்பி சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று செய்யூரில் சிஷ்ய பூஜிதாவின் வரவேற்பு நிகழ்ச்சி அம்பேத்கர் சந்திப்பு நிலையத்தில் நடந்தது. வரவேற்பு முடிந்ததும் சிஷ்ய பூஜிதாவின் வாகனம் அம்பேத்கர் நினைவிடம் முன் நின்றது.

பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சுவாமி மதுரநாதன் ஞான தபஸ்வி, சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி ஆகியோர் அம்பேத்கரின் முழு உருவ சிலை முன் ஊர் பொதுமக்கள் மற்றும் சன்னியாசிகளுடன் இணைந்து மலர்களைத்தூவி மரியாதை செலுத்தினர். மலர்களை சமர்ப்பித்த பின், யாத்திரை குழுவினர் செய்யூர் கிளை ஆசிரமத்திற்குத் திரும்பினர்.

புகைப்படம்: சாந்திகிரி ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சென்னை யாத்திரையின் போது செய்யூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button