சாந்திகிரி ஆசிரமத்தில் நாளை பூஜிதபீட சமர்ப்பண ஆண்டு விழா
போத்தன்கோடு (திருவனந்தபுரம்): குருசிஷ்ய பரஸ்பர நினைவில் சாந்திகிரி ஆசிரமத்தில் பூஜிதபீட சமர்ப்பண விழா நாளை (வியாழக்கிழமை, பிப்ரவரி 22) நடைபெறுகிறது. 41 நாள் விரதமும் நாளை நிறைவடைகிறது. காலை 5 மணிக்கு தாமரபர்ணசாலையில் சிறப்பு மலர் அர்ச்சனை. மாலை 6 மணிக்கு ஆராதனை. பின்னர் கொடியேற்றம். காலை 7 மணி முதல் மலர் அர்ப்பணம்.
சககரண மந்திரத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்து ரஹிமான் துவக்கி வைக்கிறார். 11 மணிக்கு குருதரிசனம் மற்றும் பல்வேறு அர்ச்சனைகள். 12 மணிக்கு ஆராதனை மற்றும் குரு பூஜை. மதிய உணவு. மாலை 4 மணிக்கு ஆசிரம வளாகத்தில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட யாகசாலையில் இருந்து கும்ப ஊர்வலம் தொடங்கும். கும்பமேளாவுடன் முத்துக்குடை, இசைக்கருவிகள், விளக்குகள் ஏற்றப்படும். கர்ம தோஷங்கள் மற்றும் நோய்கள் நீங்கி, குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்ற விசுவாசத்தில் பகதர்கள் கும்பத்தை தலையில் எடுத்துக் கொள்கின்றனர். ஆசிரம வளாகத்தை வலம் வந்த பிறகு குருபாதத்தில் கும்பங்களும் தீபங்களும் சமர்ப்பிக்கப்படும். நேற்று காலை 8.30 மணிக்கு ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி ஆகியோர் கும்பம் நிரப்பி இந்த ஆண்டுக்கான பூஜை வழிபாடுகள் தொடங்கின.