போத்தன்கோட்டை: சென்னை சாந்திகிரி ஆசிரமக் கிளை வெள்ளி விழாவையொட்டி நடைபெறும் “மக்கள் நலம்” மருத்துவ முகாமுக்கு மருத்துவக் குழுவினர் புறப்பட்டனர். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 52 சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று செண்ணைக்குப் புறப்பட்டது. மருத்துவக் குழுவினர் சாந்திகிரி ஆசிரமத்தை அடைந்து செய்யூருக்குப் புறப்படுவதற்கு முன் பர்ணசாலையில் குருவிடம் பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகால சேவையின் நிறைவைத் தொடும் சாந்திகிரி ஆசிரமத்தின் புதிய சேவை திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தொடங்கப்படவுள்ளது. சாந்திகிரியில் ‘மக்கள் நலம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இலவச சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளையில் ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதல் மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.