சென்னை: வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, செய்யூர் கிளையில் சாந்திகிரி ஆசிரமம் நடத்தும் ‘மக்கள் ஆரோக்கியம்’ இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துவதற்கு சித்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை செய்யூர் ஆசிரமத்தை அடைந்தனர். சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளையில் மருத்துவக் குழுவினரை ஜனனி மங்களா ஞானதபஸ்வினி மற்றும் டாக்டர் ஜனனி ஷ்யாமரூப ஞானதபஸ்வினி ஆகியோர் வரவேற்றனர். இன்று மதியம் முதல் மருத்துவக் குழுவினர் மருத்துவ புள்ளி விவரக் கணக்கெடுப்பு பணியை தொடங்குகின்றனர். ஜனவரி 7ம் தேதி நடைபெறவுள்ள பெரிய அளவிலான மருத்துவ முகாமை முன்னிட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ‘மக்கள் ஆரோக்கியம்’ திட்டத்தை பிரபல திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
Related Articles
Check Also
Close
-
കരിപ്പൂർ വിമാനാപകടം, അടിയന്തര നടപടികള് സ്വീകരിക്കാന് മുഖ്യമന്ത്രിയുടെ നിര്ദേശംAugust 7, 2020 9:50 PM