KeralaLatest

வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள்: ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

“Manju”

சென்னை : சாந்திகிரி ஆஸ்ரமம், செய்யூர் கிளை வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், குருஸ்தானிய சிஷ்யபூஜிதாவின் தீா்த்தப் யாத்திரை பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளின் இறுதிக்கட்ட செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றன. ஆஸ்ரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞானதபஸ்வியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில் வெள்ளி விழா ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, கிளை ஆஸ்ரமம் தலைவர் சுவாமி மனுசித் ஞானதபஸ்வி உட்பட ஒவ்வொரு முக்கிய துறைகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ஒவ்வொரு சன்னியாசிமாரும் சன்னியாசினிமாரும் தங்களது செயல்பாடுகள் பற்றி பேசி விவாதத்தில் கலந்துகொண்டனர். குருஸ்தானிய அபிவந்திய சிஷ்யபூஜித வெள்ளிக்கிழமை மாலை 1.30 க்கு செய்யூர் வந்தடைவார். வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தலைவர் எம். அப்பாவு தொடங்கி வைப்பார். அமைச்சர் கே.எஸ். மஸ்தான், திருநாவுக்கரசர் எம்.பி போன்ற பல முக்கிய பிரமுகர்கள் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.

மக்கள் ஆரோக்கியம் சித்த மருத்துவ முகாம் பற்றிய விவரங்களை சித்த மருத்துவ குழு பிரதிநிதிகள் பேசினர்.

Related Articles

Back to top button