பெங்களூரு: பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு சாந்திகிரி ஆசிரமத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சர்ஜாபூர் ரோடு கிளை ஆசிரமத்தில் கூட்டம் நடைபெற்றது.
சுவாமி பக்ததத்தன், சுவாமி சாயுஜ்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். கே ரகுராம் ஷெட்டி, விஜயன் எஸ், டி சதீஷ் மெலண்டா, கவிதா ஷெட்டி, கிஷோர் டி ஆகியோர் பங்கேற்றனர்.