புது தில்லி; சாந்திகிரி ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி தி.மு.க. எம்.பி கனிமொழியை சந்தித்தார். சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்தது. சாந்திகிரி சென்னை கிளை வெள்ளி விழா ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, ஆலோசனை குழு தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர்கள் சபீர் திருமலா, ஜெயபிரகாஷ் ஏ., சாந்திகிரி ஆசிரமம், புதுதில்லி மண்டல அலுவலக பொது மேலாளர் டாக்டர் கிரண் ஸ்ரீதர் மற்றும் முதுநிலை மேலாளர் (பொது மக்கள் தொடர்பு) மணு நாயர் ஆகியோர் உடன் இருந்தனர். வெள்ளி விழா கொண்டாட்டங்கள் 2024 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையை அடுத்த செய்யுரில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெறும்.