சென்னை ; சாந்திகிரி ஆசிரமம், சென்னை கிளை வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆசிரம பிரதிநிதிகள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யு. திருநாவுக்கரசர் எம்.பி.யுடன் சந்திப்பு நடத்தினர். சாந்திகிரி ஆசிரம் மேற்கொண்டு வருகின்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் ஆன்மீகப் பணிகள் குறித்து எடுத்துக்கூறி, ஜனவரி 5 முதல் 8 வரை நடைபெறும் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெற அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆசிரமம் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஸ்வாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, ஆலோசனைக் குழுவில் கல்விப் பிரிவு ஆலோசகர். ஜி.ஆர். கிரண், மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ் டி, சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் அடங்கிய அணி மாண்புமிகு எஸ். திருநாவுக்கரசர் எம்.பி.யை சந்தித்தனர்.