செய்யூர்: சென்னையில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ‘ஃப்ளாஷ் மோப்’ என்ற நடனத்தின் மூலம் வெள்ளி விழா நிகழ்ச்சியைக் கொண்டாடினர்.
மேல்மருவத்தூர், சித்தமேடு மற்றும் செய்யூர் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்திய இந்த நடனம் ‘ரெம்ப நல்லாயிருக்கு’ என்று அம்மக்களே பாராட்டும் விதத்தில் அவர்களை மிகவும் கவர்ந்தது .
எப்போதும் நகரும் நகர நெரிசலில் மாணவர்கள் திடீரென நடனம் ஆடுகிறார்கள்,
அதை அறிய வருபவர்களுக்கு முன்னால் நடனத்தின் முடிவில் ஒரு பதாகை(Baner) காட்டப்படுகிறது, அதில் “பாகுபாடு இல்லாத சமுதாயம் – சாந்திகிரி வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே இது வெறும் ‘ஃபிளாஷ் மாப்’ நடனம் என்பதை விட, வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல செய்தி. செய்யூர் சந்திப்பில் கடந்த இரண்டு நாட்களாக சூரிய அஸ்தமனம் அழகாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
செய்யூரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள கிளை ஆசிரமத்தின் ‘வெள்ளி விழா’ நிகழ்ச்சிகள் பற்றிய செய்தி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வரை பரவியுள்ளன. ஆசிரமத்தின் முன் வீதிகள்தோரும் வரிசையாக அமைக்கப்பட்ட வண்ணக் கொடிக்கம்பங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன . சாந்திகிரியின் மருத்துவச் சுகாதாரக் கணக்கெடுப்பு 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடைந்தது. செய்யூர் கிராம பஞ்சாயத்தின் தலைமையில் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறன்றன.