ArticleLatestThiruvananthapuram
கடைசியாக ஒரு காட்சி, சுவாமியை ஒரு முறை காண
திருவனந்தபுரம் (போத்தன் கோடு): நேற்று குருஜோதியில் இலயனம் ஆன சாந்திகிரி ஆசிரமம் அமைப்பு செயலாளர் குருமித்ரன் சுவாமியின் பெளதீக உடல் ஒரு முறை காண மற்றும் அஞ்சலி செலுத்த அனைத்து தரப்பு மக்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுவஸ்தி பெளன்டேஷன் பொது காரியதரிசி ஏபி ஜோர்ஜ், தொழில் அதிபர் கோகுல் கோவிந் மற்றும் சமுதாய பிரபலங்கள் காலையில் 8.30 மணிக்கே தங்களது அஞ்சலிகள் செலுத்தி சென்றனர். பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளும் வந்து அஞ்சலி செலுத்தினர். குழந்தைப் பருவத்திலேயே தான் பழகிய பலரும் இப்போது சுவாமியை கண்டு தங்கள் அஞ்சலிகள் சமர்ப்பிக்க வந்து சேருகின்ற தருணங்கள் கடந்து போகின்றன.